விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Tuesday, April 29, 2014

ஊருக்குள் புகுந்த காட்டெருமைகளால் சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓட்டம்

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த கோடை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கோடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்  கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் கூட்டம் ஒன்று திடீரென வீதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் காட்டெருமைகள் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டுக் கொண்டு இருந்ததால் அந்த பாதையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்டினர் . 

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates