கோடை காலம் தொடங்கியிருப்பதால் வெயில் சுட்டெரிக்கத்
தொடங்கியுள்ளது. கோடை வெயில் காலத்தை முன்னிட்டும் , விடுமுறை காலத்தை கழிப்பதற்காகவும்
மலைப்பிரதேசமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெயிலின்
தாக்கத்தை தனிப்பதற்காகவும் , கொடக்கானலில் உள்ள குளுமையை மகிழ்ச்சியான முறையில் கொண்டாடுவதற்காகவும் ஏராளமானோர்
குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அங்குள்ள முக்கிய சுற்றுலாப்
பகுதியான பிரையண்ட் பூங்கா , பசுமைப் பள்ளத்தாக்கு , துண்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள்
வெள்ளம் அலைமோதி காணப்படுகிறது. கூட்ட நெரிசல்
காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை காலம் என்பதாலும்
, கோடை காலம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வரத்து அதிகரிக்கும் என்பதால்
சுத்தமான குடிநீர் , கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று
சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment