விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Thursday, May 1, 2014

மும்பை அணிக்கு ஐந்தாவது அடி கொடுத்தது ஐதராபாத் அணி

ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை அணி மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களம் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் வார்னர் 51 பந்துகளுக்கு 65 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து ரன் எடுக்க திணறியது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அபாரமாக பந்து வீசி எதிரணியினரை திணரடித்த ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்புச் சாம்பியன் மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 5 ஆவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates