விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Wednesday, April 30, 2014

சென்னை குண்டு வெடிப்புக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி குறைந்த 2 குண்டுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையம் ஆகியவை காவல்துறையின் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , குண்டு வெடிப்பு குறித்து  பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குண்டு வெடிப்புச் சதிச் செயலலில் ஈடுபட்டவர்களை பிடிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் , சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates