ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை அணி ஐதராபாத் அணியை
எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி சென்னை அணியின் நேர்த்தியான
பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் ரன் எடுக்க திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்
ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி
ஆடிய சென்னை அணியின் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தனர்.
கடைசி ஓவரில் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அபாரமான பவுண்டரி அடித்து
கேப்டன் தோனி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அபாரமக ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்
வெய்ன் சுமித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற
நான்காவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment