விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

  • HEADING HERE

    DESCRIPTION HERE
  • HEADING HERE

    DESCRIPTION HERE
  • HEADING HERE

    DESCRIPTION HERE
  • HEADING HERE

    DESCRIPTION HERE
  • HEADING HERE

    DESCRIPTION HERE

Thursday, May 1, 2014

திருவள்ளூரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க கோரிக்கை



திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் , பெரியபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.  சட்டவிரோதமாக அள்ளப்பட்ட தரம் குறைந்த மணல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மும்பை அணிக்கு ஐந்தாவது அடி கொடுத்தது ஐதராபாத் அணி

ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை அணி மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களம் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் வார்னர் 51 பந்துகளுக்கு 65 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து ரன் எடுக்க திணறியது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அபாரமாக பந்து வீசி எதிரணியினரை திணரடித்த ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்புச் சாம்பியன் மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 5 ஆவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவையில் யானைகள் அட்டகாசம்

கோவையை அருகே உள்ள பாலவிநாயகர் நகரில் சுமார் 140 வீடுகளில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இப்பகுதிக்குள் சுமார் 6 காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தின. மேலும் யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த ஜோதி என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Wednesday, April 30, 2014

சென்னை குண்டு வெடிப்புக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி குறைந்த 2 குண்டுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையம் ஆகியவை காவல்துறையின் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , குண்டு வெடிப்பு குறித்து  பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குண்டு வெடிப்புச் சதிச் செயலலில் ஈடுபட்டவர்களை பிடிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் , சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி , 10 பேர் படுகாயம்

இன்று காலை 7 மணி 5 நிமிடங்களுக்கு சென்னை செண்ட்ரல் வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 மணி 15 நிமிடங்களுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும்  பதற்றம் நிலவி வருவதால் , பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுநர்கள் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குண்டு வெடிப்பில் உயிழந்தவரின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 25 அயிரம் ரூபாயும் , சாதாரண காயமடந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக செண்ட்ரல் ரயிலொ நிலையத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்களையும் , சென்னை விமான நிலையத்தையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குண்டு வெடிப்பு காரணமாக சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Tuesday, April 29, 2014

டெல்லி அணியில் நைலுக்கு பதிலாக தாகிரைச் சேர்க்க வாய்ப்பு

ஏழாவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை , மும்பை உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் டெல்லி டெர்டெவில்ஸ் அணியின் வேகப்பந்து வீரர் நாதன் கோல்ட்டர் நைல் (ஆஸ்திரேலியா) காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியுள்ளர்.

அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் இடம் பெறலாம் என்று தெரிகிறது. இம்ரான் தாகீரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மதுக்கரையில் வாழைத் தோட்டத்தை சீரழித்த காட்டு யானைகள்

கோவை மதுக்கரை அறிவொளி நகரில் மலைப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 2 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றி திரிந்தது.

அந்த பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வாழைகளை முறித்து தின்று மிதித்து நாசம் செய்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் தங்களது வீட்டுக்குள் நுழைந்து பதுங்கி கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் ஏந்தியும், மத்தளம் அடித்தும் யானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. மக்களுக்கு போக்கு காட்டிய காட்டு யானைகள் 1 மணி நேரதுக்கு பின்னர் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

இதனால் அந்த பகுதி மக்கள் விடியவிடிய தூங்காமல் தவித்தனர்.


 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates