விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Wednesday, April 30, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி , 10 பேர் படுகாயம்

இன்று காலை 7 மணி 5 நிமிடங்களுக்கு சென்னை செண்ட்ரல் வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 மணி 15 நிமிடங்களுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும்  பதற்றம் நிலவி வருவதால் , பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுநர்கள் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குண்டு வெடிப்பில் உயிழந்தவரின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாயும் , படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 25 அயிரம் ரூபாயும் , சாதாரண காயமடந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக செண்ட்ரல் ரயிலொ நிலையத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை செண்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்களையும் , சென்னை விமான நிலையத்தையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குண்டு வெடிப்பு காரணமாக சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates